நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கரம்பொன், நாரந்தனை மற்றும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அன்னலட்சுமி புண்ணியமூர்த்தி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்கள் January 12, 2026 அன்று காலமானார்.
| தோற்றம் |
நயினாதீவு, 5ம் வட்டாரம் Thursday, Mar 03, 1932 |
|
|---|---|---|
| மறைவு |
Canada Monday, Jan 12, 2026 |
இவர், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்;
காலஞ்சென்றவர்களான பொன்னையா - பொன்னாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்;
காலஞ்சென்ற பொன்னையா புண்ணியமூர்த்தி (ஓய்வுபெற்ற கிராமசேவகர்) அவர்களின் ஆருயிர் மனைவியும்;
ரதினியின் அன்பு தாயாரும்; பாஸ்கரன் அவர்களின் அன்பு மாமியாரும்;
காலஞ்சென்றவர்களான மங்கையர்க்கரசி, கந்தையா, சிவகாமிப்பிள்ளை, சோதிமணி அவர்களின் அன்புச்சகோதரியும்;
காலஞ்சென்றவர்களான குமரைய்யா, வள்ளியம்மை, சந்திரசேகரம், விநாயகமூர்த்தி, மற்றும் இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்;
சதானந்தன், லாடாதேவி ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை Jan 17, 2026 பிற்பகல் 12:00 - 3:00 மணிவரை பார்வைக்காக 384 Finley Avenue, Ajax, ON L1S 2E3 இலுள்ள Ajax Crematorium & Visitation Centre இல் வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை Jan 18, 2026 பிற்பகல் 1:00 - 3:30 வரை ஈமக் கிரியைகளும் அதைத் தொடர்ந்து தகனக்கிரியைகளும் இடம்பெறும்.
இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.