சரஸ்வதி கோபாலசுந்தரம்

நயினையூர் நல்ல செல்வந்தன் நல்லதம்பி மகள் நற்குணங்கள் கொண்டநல் மணியின் மனையாள் நன்னாளாம் தான் பிறந்த நாளை இன்று ( 18/3 ) காணும் வேளை -இந் நாளில் வாழ்த்திடுவோம் இன்பமாய் நீடு வாழி மணி செய்த பாக்கிமாய் வாய்த்தநல் மனையாளே பிணி தீர்க்கும் பிள்ளைகளைப் பாருக்குத் தந்தவளே பணி செய்து நாகம்மை பாதம் தொழுபவளே தணியாத தமிழ்ப் பற்றைத் தாகமாகக் கொண்டவளே உ டுத்தும் சேலை விதத்தின் அழகும் உள்ளதை உள்ள படி பேசும் உன் பேச்சும் உயர் செல்வம் கல்விக்காய் வாழும் உன் மூச்சும் உன்னை ஒரு படி உயர்த்திக் காட்டி நிற்கும் தமிழ் தமிழ் என்று உன் பேச்சிருக்கும் - அந்தத் தமிழ் மொழி போல் உன் வாழ்வு நீண்டிடட்டும் தன்னிகரில்லாத் தாய் உந்தன் தண்ணளி தரணியில் எமக்கு என்றும் கிடைத்திடட்டும் - Nayinai Nankai

Similar events