நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாலயத்தில் கடந்த 08 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக கடமையாற்றி பல மாணவர்களை புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைய வைத்து சாதனை படைத்த ஆசான் ஸ்ரீஞானேஸ்வரன் அவர்கள் 20-12-2025 அன்று தனது 60ஆவது அகவையில் கடமைக்காலம் முடிந்து ஓய்வுபெற்று செல்கின்றார்.
மற்றும் இவரது துனைவியார் ஸ்ரீஞானேஸ்வரன் ஏகநாயகி அவர்கள் கடந்த 10ஆண்டுகளாக நயினாதீவு மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி 24-12-2025 அன்று தனது 60ஆவது அகவையில் கடமைக்காலம் நிறைவடைந்து ஓய்வு பெற்றுச் செல்கின்றார்.
இவர்கள் இருவரினது ஓய்வுக்காலம் சிறப்பாக இருக்க நயினை நாகபூஷணி அம்மனை வேண்டி நயினை மக்களும் பாடசாலைச் சமூகமும் மனதார மகிழ்வுடன் பாராட்டி வாழ்த்துகின்றனர்.