சிந்தையும் செயலும் ஒன்றெனக் கொண்டவள்
நொந்தவர்க்கும் நலிந்தவர்க்கும் நோய்வாயுற்றவர்க்கும்
தந்தையாய்த் தாயாய்த் தண்ணளிகொண்டு தாதிப்பணி புரிவோள்- விந்தை
ஒன்று தந்து வியக்க வைத்தாள் எனை ஐம்பது அகவை அடைந்தாள்
என்று மகிழ்ச்சியைத் தேடும் மனஅழுத்தம் நிறைந்த நாட்டில்
மற்றவர் மகிழும் கலகலப்பான உன் பேச்சோடும்
உற்றவரை உள்ளன்போடு உபசரிக்கும் பண்போடும்
பெற்றவரோடும் கொற்றவன் தன்னோடும்
நற்றவம் செய்து நீ பெற்ற நன்மக்கட் செல்வத்தோடும்
நாகம்மை அருள் சுரக்க இன்பமாய் நீடு வாழி!
நயினை நங்கை
Kalamathy
Jayakumar