நடைபெற்று முடிந்த 2015 ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை (A\L) பெறுபேறுகள்

நயினை மண்ணின் மைந்தன் கேதீஸ்வரன் நாகேஸ்வரி தம்பதிகளின் புதல்வன் கௌதமன் யாழ் இந்து கல்லூரி மாணவன் வர்தகப்பிரிவில் 3A பெறுபேறுகள் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். நயினை மண்ணின் புதல்வி குருச்சந்திரநாதன் பரிமளாதேவி தம்பதிகளின் புதல்வி மதிவதனி (யாழ் இந்து மகளீர் கல்லூரி மாணவி) கலைப்பிரிவில் 3A பெறுபேறுகள் பெற்று யாழ் மாவட்டத்தில் 8ம் இடத்தினையும் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார். நயினை மண்ணின் மைந்தன் மகாலிங்கம் (மகான்)மகாலெட்சுமி தம்பதிகளின் புதல்வன் . மயூரன் யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவன் கலைப்பிரிவில் 2A B பெறுபேறுகள் பெற்று மாவட்டமட்டத்தில் 33 வது இடத்தையும் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளார் ஞானேஸ்வரி அவர்களின் மகளான சுபாதிகா சித்திஅடைந்துள்ளார் A/2B. இவரை அம்பாளின் நல்லருளுடன் மேலும் கல்வியில் சிறந்து விளங்க மனதார வாழ்த்துகின்றோம்

Recent news