தென்னிந்திய பாடகர்களின் பக்தி இசை அலை - 13ம் திருவிழா இரவு சப்பற திருவிழா

எழு கடல்களும் தாலாட்டுப்பாட எட்டுத்திக்கும் அவள் நாமம் ஒலிக்கும் நயினாதீவின் காடலோரத்தில் வீற்றிருந்து ஆட்சி புரியும் அன்னை நாகபூஷணியின் 13ம் திருவிழா இரவு சப்பற திருவிழாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தென்னிந்திய இசைக்கலைஞர்களின் ''பக்தி இசை அலை''

 

நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் 13ம் திருவிழாவான சப்பற திருவிழாவின் போது அம்பிகையை இசையால் வசமாக்க Sajana Midea - Canada நந்தன் ஆதரவில் இந்தியாவில் இருந்து முதற் தடவையா நயினை மண்ணில் கால் பதிக்கவுள்ளனர்.

 

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் புறம்போக்கு திரைப்பட இசையமைப்பாளர் திரு. வர்ஷன் இசைக்குழுவினருடன் Play back singers & Airtel super singers இணைந்து வழங்கும் ''பக்தி இசை அலை''

 

காலம்: 29/06/2015 இரவு 08:00 மணிக்கு

இடம்: நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கலை அரங்கு

 

விஜய் TV சூப்பர் சிங்கர் .சாய் சரண், கௌசிக் ,உஷாராஜ் .அம்ரிதா கமலஜா. இவர்களுடன் பெங்களூர் கர்நாடக சங்கீத வித்வான்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

 

இன் நிகழ்வை காண நீங்கள் பக்தி மழையில் நனைய தயாராகுங்கள். அம்பாள் அருள் மழையிலும் பக்தி இசை மழையிலும் நனைய ஓடோடி வாருங்கள்.

 

ஓம் சக்தி


Source: Social Media

Similar events