ஐயனார் கோயில்


நாகபூஷணி அம்பாள் ஆலயத்தின் வடக்கே காவல் தெய்வமாக ஐயனார் கோயில் அமைந்துள்ளது. புராணமான இக்கோயில் சிலப்பதிகார செட்டியார் காலத்தது என்று கருதப்படுகின்றது. சித்திரைமாதப் பூரணைத்தினத்திலே இக்கோயில் கந்தபுராண படனமும் கஞ்சிவார்த்தலும் தொன்று தொட்டு நடைபெற்று வரும் வழிபாடாக இருந்தது. இக்கோயில் தற்போதய கட்டிடம் சுமார் 300 வருடப் பழமையுடையது. இவ்வாலயத் தலவிருட்சமாக ஆலும் அரசும் விளங்குகின்றன.