நயினாதீவின் தென்பால் வீற்றிருந்து அடியவர் குறைதீர்க்கும் எங்கள் ஆனைமுகனின் ரதோற்சவம். நேற்றைய தினம் (14/04/2015) மன்மத வருடப்பிறப்பில் சுபநேரத்தில் அந்தண சிவாச்சாரியார்களின் வேதம் முழங்க அடியவர் அனைவரின் அரோகரா கோஷம் முழங்க தம்பியவன் துணையோடு இரதம் ஏறி வலம் வந்து வேண்டிய அடியவர்க்கு அருள் வழங்கி வந்தான் வேழமுகத்தான் எங்கள் செம்மனத்தம்புலான்.
''துன்பமெல்லாம் நீக்கிடுவாய் விநாயகனே
எங்கள் துயர் தீர்க்க வந்திடுவாய் நாயகனே ''
Source:
Social Media