அலை கடலின் ஓரத்தில் அமர்ந் திருந்து உன்
ஆனந்த வடிவு காண வருவோருக்கு
இன்னருளால் இன்பங்கள்
ஈந்து அருளும் தாயே
உமை அம்மையே எந்தனுக்கும் -நீ உறையும்
ஊரில் எனை ஈந்ததத்காய்
என் மனக் குறை தீர்த்து
ஏற்று அருள்வாய் நீயே
ஐம் புலனா சையால் உழலும் எனக்கு
ஒளிவிடும் உன்னருள் தருவாய்
ஒங்கா ரரூ பியே உலகுக்கு அன்னையே
ஒவ்டதம் போல் அடியார்க் குதவும் உமையே
ஆக்கியவர்: நயினை நங்கை
Author
Sarumathy
Sabesan