வீராசாமிச் செட்டியார் பாடிய பாடல்

ஆண்ட்கொடிக ளெல்லா மொரு தலையில்

   நீ சுமந்தரு ளிதலினா லல்லவோ அம்புயப் பிரமன் படைக்கத் தொடங்கினான்

அகிலமும் சிதைவிலாமல் புண்ட ரீகலோசன் பாதுகாக்கின்றான்

   புராந்தகன் சங்கசித்துப் புகழ் மருவுகின்றான் இணங்கி நீதயைசெய்து

அருள்புரியாதிருந்தனை யெனில் எண்டிசைகளும் புவியுங்கிரிகளும்

   எப்படி நிலைத்திருக்கும் எவ்விதத்தினில் அந்த மூவர் தொழிலி

ஈடேறு மீசனரவிந்த் பாதத் தொண்டர் கணிறைந்திடு மிலங்கை

   நயினார்தீவு துதிசெய்யும் படியமர்ந்தோய் சுரலோக லோகேந்திர நரலோக புவனேந்திரர்

தொழவேறு நாகேந்திரனே.

 

ஆக்கம் : வீராசாமிச் செட்டியார்


Contributed by: Gopalasundaram Sinnathamby

Other blogs

Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை