அச்சம் இன்றி சொல்லும் வார்த்தை நாகபூஷணி

நயினையம்பதி வளரும் தாயே, நாகபூஷணி!    நாளும் தொழுவார் வினைகற்றும் நாகபூஷணி! - நயினையம்பதி... அலைகளோடு தென்றல்கூடி நாணமோட    கரையை தழுவிச் செல்லும் வார்த்தை நாகபூஷணி! மலையின் வேம்பின் கிளைகளொடு தென்றல் உரசி உரசி    இசைக்கும் இசையோடு நாகபூஷணி! - நயினையம்பதி... கற்றிஞர் கவிஞரோடு பாடும் குயிலும்    மருதநில உழவரோடு நத்தையினமும் ஓதும் நாமம் நாகபூஷணி! முத்திடித்து தூள்களாக்கி சிந்திவிட்ட – உன்    முற்றமெங்கும் ஊருகின்ற சிற்றெறும்பு சொல்லும் நாமம் நாகபூஷணி! - நயினையம்பதி... ஐயம் தொடர அறிவிழந்து மெய்யும் சோரும் வேளையில்    பையவந்து காலதூதர் கயிறுதான் ஏறியினும் அச்சம் இனிற சொல்லும் வார்த்தை நாகபூஷணி! – நான்    அச்சம் இன்றி சொல்லும் வார்த்தை நாகபூஷணி! - நயினையம்பதி... நஞ்சுநாகம் எழுந்து வண்ணக்குடைபிடிக்க    தஞ்சா முனிவன் உன்னிடை தழுவி நிற்கும் - உன் அருள் கோலம் கண்டு என்னிருவிழி நீர்கசிய    இருளோடு இருவினையகல முத்திநிலையில் சொல்லும் வார்த்தை நாகபூஷணி! - நயினையம்பதி... ஆக்கம் : நயினை இளந்திரையன் - லண்டன்எழுத்துருவாக்கம் : நயினை.கொம்

Other blogs

Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிறீஸ்கந்தராஜா
Written by: சிவ மேனகை