ஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை ஸ்ரீ நாகபூணி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா 30.06.2015 செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு ஆரம்பமானது.
அதற்கு முன்னதாக அதிகாலை 4.30மணிக்கு விசேட பூசைகள் ஆரம்பமாகி காலை 7மணிக்கு வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று காலை 8மணிக்கு அம்பாள் தேருக்கு எழுந்தருளினார். தேரில் அர்ச்சனைகள் நிறைவடைந்ததும் தேருலாவில் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தாள்.
தேர் உற்சவத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திங்கட்கிழமை மாலை முதல் ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர்.
Thanks to Analai Express Media
Event Date:
Tuesday 30 / Jun 2015
Source: